மருத்துவக் குறிப்புகள்
வாயு தொல்லை நீங்க!!! சுக்கு - 50 கிராம் மிளகு - 50 கிராம் திப்பிலி - 50 கிராம் இந்துப்பு - 50 கிராம் சீரகம் - 50 கிராம் கருஞ்சீரகம் - 50 கிராம் கடுக்காய் - 50 கிராம் பெருங்காயம் - 50 கிராம் சாதிக்காய் - 50 கிராம் இவை அனைத்தையும் முறைப்படி சுத்தி செய்து தனித் தனியாக மிக்ஸியில் போட்டு பொடி செய்து, பின் எல்லா பொடிகளையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். தேன், மோர், வெந்நீர் இதில் ஏதாவது ஒன்றுடன் கால் டீஸ்பூன் அளவு கலந்து காலை, இரவு சாப்பிட்டு வர வாயு தொல்லை, விலா எலும்பு வலி, இடுப்பிலிருந்து மார்பு வரை வேதனை தரும் வாயு தொல்லை, மூச்சை அழுத்தி பிடிக்கும் நெஞ்சு வலி, முதலியவைகள் குணமாகும். மோர்!!! மோருண வளிமுதல் மூன்றையு மடக்கி யாருமெய் யினைத்தின மாதரித் திடுமே - தேரையர் காப்பியம். மோர் தினம்தோறும் குடித்து வந்தால் உடலில் முக்குற்றங்களும்* கூடாமலும், குறையாமலும் ஒழுங்கு பெற செய்து உடலை ஒவ்வொரு ஆளும் ஆதரித்து வளர்த்து வரும். (முக்குற்றங்கள் - வாதம், பித்தம், கபம்) via Easwari Ragu